Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

மே 06, 2019 11:29

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல்  காற்று வீசும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டி மீட்டரும், வேலூரில் 5 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்