Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டி மீட்டரும், வேலூரில் 5 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.